கடலுார்; கடலுாரில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, நகர செயலாளர் குமரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் நகராட்சி சேர்மன் சுப்ரமணியன், முன்னாள் துணைத் தலைவர் சேவல்குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாநில மருத்துவர் அணி தலைவர் சீனிவாச ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நல்லாத்துாரில் நடந்த நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு ஒன்றிய சேர்மன் பக்கிரி தலைமையில் மாலை அணிவித்தனர். ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் ராஜா, எம்.ஜி.ஆர்., இளைஞரணி ஒன்றிய செயலாளர் பெருமாள், துணை செயலாளர் மதிவாணன், வேல்முருகன், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர்., சிலைக்கு, கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE