கடலுார்; கடலுார் அருகே வாழை, மணிலா உள்ளிட்ட விவசாய பயிர்களை காட்டுபன்றிகள் துவம்சம் செய்வதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கடலுார் அடுத்த புலியூர், சேடப்பாளையம், எஸ்.புதுார், சமட்டிக்குப்பம், ராமாபுரம், ஒதியதிக்குப்பம் பகுதிகளில் வாழைகள் அதிகம் பயிரிடப்படுகிறது. தற்போது ஏலக்கி வாழைக் கன்றுகள் நட்டு 5 மாதங்கள் ஆன நிலையில் நன்கு வளர்ந்துள்ளது.காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வாழை தோப்புகளில் புகுந்து, கன்றுகளை கீழே தள்ளிவிட்டு குருத்துகளை சாப்பிட்டுச் செல்கின்றன. பகல் நேரங்களில் அருகில் கரும்பு தோட்டத்திற்குள் பன்றிகள் மறைந்து கொள்கின்றன. மணிலா பயிர்களையும் நாசம் செய்கின்றன. புலியூர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. வனத்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE