திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் அருள்தாஸ்,58; இவருக்கு திட்டக்குடி பெண்ணாடம் ரோட்டில் வீடு மற்றும் பாரத் காஸ் ஏஜென்சி அலுவலகம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணிக்கு காரில் வந்த மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். கடையிலிருந்த அலாரம் ஒலித்ததால் அருள்தாஸ் வெளியே வந்து பார்த்த போது, மர்மநபர்கள் காரில் தப்பினர். திட்டக்குடி டி.எஸ்.பி.,வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் வந்து விசாரித்தனர்.இந்நிலையில் ஆவினங்குடி அருகே டயர் வெடித்த நிலையில் கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மர்ம நபர்கள் பயன்படுத்திய காராக இருக்கலாமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE