கண்ணுார்; கண்ணுார் ஊராட்சியில், நிழற்குடை சேதமடைந்து புதர் மண்டிக் கிடப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கண்ணுார் ஊராட்சி. மப்பேடு - சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில், இந்த ஊராட்சியில் உள்ள நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழற்குடை மிகவும் சேதமடைந்து, புதர் மண்டிக் காணப்படுகிறது. இந்த நிழற்குடையை பொதுமக்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும், நிழற்குடையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், நிழற்குடையை சீரமைத்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஊராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE