கடம்பத்துார்; நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கடம்பத்துார் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடம்பத்துாரிலிருந்து, பிரையாங்குப்பம், திருப்பாச்சூர் வழியாக, திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலை, சில மாதங்களுக்கு முன் பராமரிப்பு பணிகள் தார் சாலை போடப்பட்டது.இந்த நெடுஞ்சாலையில் உள்ள வேகத் தடைகளில் ஒளிரும் வர்ணம் இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக, டூ - வீலரில் செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்து, தற்போது சாலையோரம், வேகத்தடை மற்றும் சாலையின் நடுவே ஒளிரும் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.'தினமலர்' செய்தி எதிரொலி
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE