பொன்னேரி; வறண்ற கோளூர் ஏரியில், மழை நீர் நிரம்பி உள்ளதால், தற்போது விவசாயிகள் அதை கொண்டு நெற்பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.பொன்னேரி அடுத்த, கோளூர் கிராமத்தில், 900 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.இப்பகுதியில், நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், ஆண்டுக்கு ஒருமுறை ஏரி நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். கோளூர் பாசன ஏரியில் தேங்கும் மழை நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.ஐந்து ஆண்டுகளாக சரியான மழை பொழிவு இல்லாமல், நெற்பயிர்களுக்கு போதுமான பாசன வசதி கிடைக்கவில்லை.இதனால் நெற்பயிர்கள் காய்ந்தும், மகசூல் இன்றியும் போனது.இந்நிலையில், கடந்த மாதம், 'நிவர்' புயலால் மழை இருந்ததால், ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். தற்போது மதகுகள் மூலம் சிறிது சிறிதாக வெளியேற்றி நெல் பயிரிடப்பட்டுள்ள நிலங்களுக்கு ஏரி நீரை பாய்ச்சி வருகின்றனர்.கோளூர் கிராம விவசாயிகள் தெரிவித்தாவது:வழக்கமாக கைநடவு முறையில் நடவுப் பணிகளை மேற்கொள்வோம். ஐந்து ஆண்டுகளாக சரியான மழை பொழிவு இல்லாததால், இந்த ஆண்டும் பருவ மழை ஏமாற்றும் என எண்ணி, நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டோம்.சரியான கால இடைவெளியில் மழை பொழிவு இருந்தது. எதிர்பார்க்காத வகையில் நல்ல மழை பொழிவும், ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், நெற்பயிர்கள் நல்ல நிலையில் உள்ளன. தற்போது, கடைசி பாய்ச்சல் மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE