காஞ்சிபுரம் - மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த முதியவர், திடீரென மயங்கி விழுந்து, அதே இடத்திலேயே இறந்தார்.காஞ்சிபுரம், தேனம்பாக்கத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி மணி, 74, வேலுார் மாவட்டம், ரத்னகிரி அருகில், குடும்பத்துடன் வசித்து வந்தார்.மணி, ரேஷன் கார்டில், மொபைல் எண் இணைக்க, மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் மனு கொடுக்க, நேற்று காலை, வேலுாரில் இருந்து காஞ்சிபுரம் வந்தார்.அலுவலகம் வெளியே நடந்து வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தோர், அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். அதற்குள் இறந்துவிட்டார்.தகவல் அறிந்த காஞ்சி தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE