திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் பகுதியில் வரத்து அதிகரிப்பால் சக்கரை பூசணி விலை வெகுவாக குறைந்ததால், விவசாயிகள் அவற்றை ரோட்டோரம் வீசினர்.
ஒட்டன்சத்திரம் மார்கெட்டில் இருந்து கேரளா உட்பட வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பால், இந்தாண்டு கேரளா வியாபாரிகள் உள்ளூர் காய்கறிகளை மட்டுமே நம்புகின்றனர்.சென்ற ஆண்டு டன் கணக்கில் அனுப்பப்பட்ட சர்க்கரை பூசணி இந்தாண்டு செல்லவில்லை. இதனால் பூசணிக்காய்கள் தேக்கமடைந்துள்ளன. நல்ல மழை பெய்ததால் வரத்தும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு கிலோ ரூ.8 க்கு விற்ற பூசணி ரூ.2 க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் சாலை ஓரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.
வியாபாரி மாசி கூறுகையில், ''வெளிமாநிலங்களுக்கு எதிர்பார்த்த அளவு செல்லாததால் விலை குறைந்துவிட்டது. கிலோ ரூ.2 க்கு விற்பது நஷ்டம் தான். வேறு வழியில்லாமல் விற்பனை செய்கிறோம்'' என்றார்வியாபாரி பாரி கூறுகையில், ''விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம்தான். செலவு செய்த பணத்தை கூட திரும்ப எடுக்க முடியவில்லை. சிலர் கிடைத்த விலைக்கு விற்கின்றனர். சிலர் வழியில்லாமல் ரோட்டோரம் வீசிச் செல்கின்றனர்'' என்றார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE