ஈரோடு: மத்திய அரசின், வேளாண் சட்டங்களை கண்டித்து, பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. நேற்று, இரண்டு கோடி கையெழுத்துடன், இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, ஜனாதிபதியை பார்ப்பதற்காக, முன்னாள் காங்., தலைவர் எம்.பி., ராகுல், செயலாளர் பிரியங்கா மற்றும் பலர் சென்றனர். அவர்களை டில்லி போலீசார் தடுத்து நிறுத்தி, ராகுலை தவிர மற்றவர்களை கைது செய்ததை கண்டித்து, ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன், மாவட்ட தலைவர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் தலைவர் ராஜேந்திரன், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ்ராஜப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE