சேலம்: புனித மிக்கேல் தேவாலயத்தில் நடந்த, கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில், மக்கள் ஜெபித்தனர். சேலம், அழகாபுரம், புனித மிக்கேல் தேவாலயத்தில், நேற்று இரவு, கிறிஸ்து பிறப்பு திருப்பலி, ஆயர் சாலமன்ராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த சிறப்பு பிரார்த்தனையில், மக்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, ஜெபித்தனர். இதில் பங்கேற்றோர், தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இன்று காலை, கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE