சேலம்: மறைந்த, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 33வது நினைவு தினத்தையொட்டி, அ.தி.மு.க.,வின் மாநகர் மாவட்ட செயலர், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் தலைமையில், அக்கட்சியினர், நான்கு ரோட்டில் இருந்து, மணி மண்டபத்துக்கு, ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். இதில், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், நடேசன், பகுதி செயலர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, மாநகராட்சியில் உள்ள முக்கிய இடங்களில், எம்.ஜி.ஆர்., படங்களுக்கு, அ.தி.மு.க.,வினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல், அ.ம.மு.க.,வினரும், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE