தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, உலிபுரம்புதூர், பெருமாள்மலை அடிவாரத்தை சேர்ந்த, ஆறுமுகம் மகன்கள் தங்கவேல், 60, ராஜூ, 58, இடையே நிலப்பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம், நிலத்தின் பொது பாதையில், தங்கவேல் நடந்து சென்றபோது, ராஜூ மனைவி தனலட்சுமி, 48, அவரது தாய் செல்லம்மாள், 70, ஆகியோர், தகராறு செய்தனர். அப்போது, தங்கவேலை தள்ளிவிட்டதில், மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தம்மம்பட்டி போலீசார், கொலை வழக்கு பதிந்து, தனலட்சுமி, அவரது தாய் செல்லம்மாளை, நேற்று கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE