பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த நரசிபுரம் கிராமத்திலிருந்து, நாகமரத்து பள்ளம் மாரியம்மன் கோவில் வரையிலான, 1.5 கி.மீ., தூர தார்ச்சாலை, 42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி, நரசிபுரத்தில் பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவர் அன்பழகன், சாலை அமைக்க பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில், பென்னாகரம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரவி, வண்ணாத்திப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE