நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அடுத்த ஈச்சம்பட்டி குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பாலஜங்கமனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட ஈச்சம்பட்டியில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால், இப்பகுதியின் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இதில் அதிகளவில் கொசு உற்பத்தியாவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஈச்சம்பட்டி பகுதி மக்களின் நலன்கருதி, இங்குள்ள வீதிகளில் முறையான சாக்கடை கால்வாய் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE