ஓசூர்: ஓசூர் அருகே, தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மூலம், வேளாண் திட்டங்கள் குறித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
ஓசூர் அடுத்த சூடுகொண்டப்பள்ளியில், வேளாண் துறையின் அட்மா திட்டத்தில், தெருக்கூத்து கலைநிகழ்ச்சி மூலம், வேளாண் விவசாய திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விளக்கி கூறும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை வகித்து, கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், நக்கல்பட்டி கிராமத்தில் இருந்து வந்த கலைக்குழுவினர், திருந்திய நெல் சாகுபடி, பயிர் காப்பீட்டு, கூட்டுப்பண்ணையம், இயற்கை விவசாயம், நீர் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், தேசிய உணவு பாதுகாப்பு, துவரையில் வரிசை நடவு முறையில் உள்ள பயன்கள், இயற்கை உரங்களின் முக்கியத்துவம் மற்றும் அட்மா திட்டத்தில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து, கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் நடித்து காட்டினர். கிருஷ்ணகிரி, வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணன், ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் மனோகரன், துணை வேளாண் அலுவலர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். அட்மா தொழில்நுட்ப மேலாளர் சுகுணா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE