திருப்பதி: ஏழுமலையானை தரிசிப்பதற்காக மலைப் பாதை வழியாக வந்த வயதான பக்தர்கள் இருவர் மயக்கமடைந்திருந்த நிலையில், அவர்களை முஸ்லிம் காவலர் ஒருவர் 6 கி.மீ., சுமந்து சென்று காப்பாற்றியுள்ளார்.
கொரோனா சூழலால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அனுமதிக்காமல் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 2 லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டிச.,22 அன்று ஒரு வயதான தம்பதியினர் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் பணியில் இருந்த ஷேக் அர்ஷத் என்ற காவலருக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த அவர், முதலில் வயதான ஆணை தனது முதுகில் சுமந்து சென்று சாலையில் விட்டுள்ளார். பின்னர் 58 வயது நாகேஷ்வரம்மா என்ற பெண்மணியையும் சமந்து சென்று இறக்கிவிட்டுள்ளார். அங்கிருந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை ஆந்திர போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு காவலர் ஷேக் அர்ஷத்தை பாராட்டியுள்ளனர். இச்செயல் அவரது பணியின் மீது அவருக்குள்ள பக்தியை காட்டுகிறது என மாநில டி,ஜி.பி., புகழ்ந்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE