பத்தனம்திட்டா: கேரளாவின், பத்தனம்திட்டா மாவட்டத்தின், ரானி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ் ஆப்ரகாம், 93. இவரது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோர், மார்ச் மாதம், ஐரோப்பிய நாடான, இத்தாலியில் இருந்து கேரளா வந்தனர். அவர்களிடம் இருந்து, தாமஸ் ஆப்ரகாமுக்கும், அவரது, 88 வயது மனைவிக்கும் கொரோனா பரவியது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற இருவரும் குணமடைந்து வீடு திரும்பினர். நாட்டில், கொரோனாவில் இருந்து குணமடைந்த முதல் முதியவராக தாமஸ் கருதப்பட்டார். இந்நிலையில், முதுமை காரணமாக, தாமஸ் ஆப்ரகாம், நேற்று காலமானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE