கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயவேல்காந்தன் தலைமை வகித்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில், நடப்பு ஆண்டிற்கான காலியிட மதிப்பீடு அறிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாச்சாரத்திற்கு உட்பட்டு மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிடப்பட வேண்டும். சப் -கலெக்டர் பட்டியலை நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு உட்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின், 12 அம்ச கோரிக்கைகள் மீது அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் செந்தில், சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE