கரூர்: 'வரும், 28ல் ஜி.எஸ்.டி., தொடர்பாக புதிய நடைமுறை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் வரும் ஜன.,1 முதல், புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் வரும், 28 காலை, 10:30 மணிக்கு கரூர் திண்ணப்பா தியேட்டர் அருகில் உள்ள ஆர்த்தி ஹோட்டல், மினி அழகம்மை ஹாலில் நடக்கிறது. இங்கு, துணை ஆணையர் (மாநிலவரி) கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளார். எனவே வணிகர்கள், விற்பனை வரி ஆலோசகர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE