குளித்தலை: குளித்தலை அடுத்த, வளையப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 37. இவரது தம்பி விஜயநாதன். இருவரும் ஆடு மாடுகளை அருகிலுள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்த்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த, 22ல் வழக்கம் போல் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, விஜயநாதனின் மாடு நாகராஜனை முட்ட வந்துள்ளது. இதில், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், விஜயநாதனும், அவரது மனைவி சின்னம்மாளும், நாகராஜனை கிரிக்கெட் மட்டையால் தாக்கி காயப்படுத்தினர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE