க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னதாராபுரம் பஞ்சாயத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சின்னதாராபுரம் பகுதியில் அரசு பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வங்கிகள், அஞ்சல் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள், தற்காலிகமாக சாலையோர நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்திருக்கும் அவலநிலை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் சின்னதாராபுரம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு விட்டதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE