நாமக்கல்: திருச்செங்கோடு அடுத்த உஞ்சனையில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் சேரலாதன் முன்னிலையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு மறைமுக ஏலம் நடந்தது. அதில், பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். தேங்காய் கிலோ, 22.25லிருந்து, 29 ரூபாய்; தேங்காய் பருப்பு, 70லிருந்து, 120 ரூபாய் வரை ஏலம் போனது. 325 கிலோ தேங்காய், 8,450 ரூபாய், 71 தேங்காய் பருப்பு, 8,100 ரூபாய் என, 16 ஆயிரத்து, 550 ரூபாய்க்கு விற்பனையானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE