நாமக்கல்: எருமப்பட்டி புது பஸ் ஸ்டாண்டில் திறக்கப்படாத கழிவறையால் பயணிகள் அவதிப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சியில், 2018ல் புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்தது. அங்கிருந்து முசிறி, தாத்தங்காயர்பேட்டை, துறையூர், பெரம்பலூர், நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. அதில், 35 தனியார் பஸ்கள், 40 அரசு பஸ்கள், 16 டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருக்கும் அறை இரண்டு, 13 கடைகள் உள்ளன. மேலும், அங்கு கட்டப்பட்டுள்ள இரண்டு நவீன கட்டண கழிவறைகளும் கடந்த சில மாதங்களாக பூட்டியே காணப்படுகிறது. பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், பஸ் ஸ்டாண்ட் வளாகம் லாரிகள் நிறுத்துமிடமாகவும், கால் நடைகள் மேய்ச்சல் களமாகவும் மாறியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஸ் ஸ்டாண்ட் கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE