வாழும் நினைவுச்சின்னம்!
பா.ஜ.,வின், பணக்கார நண்பர்கள் மற்றும் கார்ப்பரேட் நண்பரின் நலனுக்காக, விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மற்றும் ஏழைகள் நலனை, மத்திய அரசு விற்பனை செய்கிறது. பா.ஜ., அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியின், ஒரு வாழும் நினைவுச்சின்னமாக, விவசாயிகள் போராட்டம் அமைந்துள்ளது.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
முதலைக் கண்ணீர்!
விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் ராகுல், பொய்களை கூறி, அவர்களை தவறாக வழி நடத்துகிறார். ஆனால், அவரது மைத்துனரே, விவசாயிகளின் நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளார். இதற்கு ராகுலின் பதில் என்ன?
ஸ்மிருதி இரானி
மத்திய ஜவுளித் துறை அமைச்சர், பா.ஜ.,
மக்களுக்கு கவலையில்லை!
மும்மூர்த்திகளான நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரிடம், மத்திய அரசு நிர்வாகம் இருக்கும் வரை, இந்திய மக்கள் எதற்காகவும் கவலைப்பட தேவையில்லை. பிரதமர் மோடியின் தலைமையில், லடாக் மக்கள் முதல் முறையாக, மிகவும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.
ஜம்யங் ஷெரிங் நம்கயால்
லடாக் எம்.பி., - பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE