லண்டன்:பஞ்சாபில், 2009ல் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, பிரிட்டனில் வசிக்கும் மூன்று சீக்கியர்களை, போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாபின் பாட்டியாலாவில், ஆர்.எஸ்.எஸ்., மூத்த உறுப்பினர் ருல்டா சிங், 2009ல் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு வாரத்திற்கு பின் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக, ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும், மூன்று சீக்கியர்களை, சமீபத்தில், போலீசார் கைது செய்தனர். இவர்கள் மூவரையும் நாடு கடத்த, வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம், 'வாரன்ட்' பிறப்பித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE