சென்னை:'புரெவி' புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக, மத்திய குழுவினர், நாளை மறுநாள், தமிழகம் வரவுள்ளனர். ஏற்கனவே, நிவர் புயலில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்த குழுவினர் தான், இப்போதும் ஆய்வு மேற்கொள்ள வர உள்ளனர்.
டில்லியில் இருந்து,விமானத்தில் சென்னை வரும் மத்திய குழுவினர், மதுரைக்கு செல்கின்றனர். அங்கிருந்து ராமேஸ்வரம் சென்று, புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர். பின், புதுக்கோட்டை செல்கின்றனர்.
இரண்டாவது நாள், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், கடலுார், சிதம்பரம், நாகப்பட்டினம் பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர்.
மூன்றாம் நாள், தஞ்சாவூரில், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம், பயிர் சேதம் தொடர்பாக கருத்து கேட்க உள்ளனர். பின், திருச்சி சென்று, அங்கிருந்து டில்லி திரும்புகின்றனர். இதுகுறித்த, அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று வெளியாகும் வாய்ப்புள்ளது.சென்னை, டிச. 26-
'நிவர்' புயல் பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழுவினர் தான், 'புரெவி' புயல் சேதங்களையும் ஆய்வு செய்ய வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில், இம்மாதம் வீசிய, நிவர் புயல் காரணமாக, 41 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவினர், தமிழகம் வந்து, பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து சென்றனர்.
இதை தொடர்ந்து உருவான, புரெவி புயல் காரணமாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டியது. இதனால், ஏழு லட்சம் ஏக்கர் வரையிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. பயிர் பாதித்த விவசாயிகள், அரசிடம் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மத்திய குழுவினர் ஆய்வுக்கு பின், நிவாரண நிதி வழங்கப்படும் என, அரசு கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE