சென்னை:தமிழகத்தில், 11 மாவட்டங்களில், கொரோனா தொற்று பாதிப்பு, ஒற்றை இலக்குகளில் உள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 235 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 65 ஆயிரத்து, 510 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 292; கோவையில், 95 உட்பட, 1,027 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்பு, 35 மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது; அதில், 11 மாவட்டங்களில், ஒற்றை இலக்குகளில் பாதிப்பு பதிவாகி உள்ளது.
மார்ச் முதல் நேற்று வரை, 1.37 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், எட்டு லட்சத்து, 12 ஆயிரத்து,142 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சிகிச்சை பெறுபவர்களில், சென்னையில், 332 பேர் உட்பட, 1,103 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 90 ஆயிரத்து, 965 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.தற்போது, சென்னையில், 2,932; கோவையில், 914 பேர் உட்பட, 9,129 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்றால் நேற்று, 12 பேர் உட்பட, இதுவரை, 12 ஆயிரத்து, 48 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE