திருவாடானை : தொண்டி அருகேமுள்ளிமுனை, காரங்காடு, திருப்பாலைக்குடி பகுதியில் விசைப்படகு மீனவர்கள் கரை வலையால் மீன்பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது:விசைப்படகு மீனவர்கள் நான்கு கடல் மைல் துாரத்திற்கு அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் கரை ஓரங்களில் பெரிய வலை மூலம் இரட்டை மடி வைத்து மீன்பிடிப்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.இது குறித்து தேவிபட்டினம் மரைன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளோம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE