திருவாடானை : திருவாடானை அருகே மல்லனுார் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் கிராம மக்கள் மணல் மூடைகளை அடுக்கி தடுத்தனர்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக் கண்மாய் மழை தண்ணீரால் நிரம்பியது. நேற்று முன்தினம் கண்மாயின் ஒரு பகுதியில் சேதமடைந்ததால் தண்ணீர் வெளியேறியது. கிராம மக்கள் மணல் மூடைகளைஅடுக்கி அடைத்தனர்.இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது: பாம்பாற்றிலிருந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் கண்மாய் நிரம்பியது. இக் கண்மாயில் உள்ள இன்லெட் ஊராட்சி ஒன்றிய நிதி மூலம் சீரமைக்க முடிவு செய்யபட்டது. பணிகள் துவங்குவதற்குள் இன்லெட் சேதமடைந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. விரைவில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE