பாகூர்: கிருமாம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சமூக நலத்துறை சார்பில், கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, துணை இயக்குனர் கலாவதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் கந்தசாமி, கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், சேலியமேடு, சார்காசிமேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 103 மாற்றுத்திறனாளிகளுக்கு, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டையை வழங்கினார்.நிகழ்ச்சியில், சமுக நலத்துறை அதிகாரிகள், காங்., பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE