புதுச்சேரி: வங்கி எதிரில் நிறுத்தியிருந்த பைக் பெட்டியை உடைத்து ரூ. 1.23 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, பழைய சாரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாரதி, 55; மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காசாளராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் மதியம், மேட்டுப்பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ. 1.23 பணம் எடுத்து கொண்டு, தனது பைக் பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார்.வழுதாவூர் சாலை, திலாஸ்பேட்டையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை எதிரில் தனது பைக்கை நிறுத்தி விட்டு, பாஸ்புக் என்ட்ரி போடுவதற்காக வங்கிக்கு சென்றுவிட்டு திரும்பினார். அப்போது பைக் பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ. 1.23 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து பாரதி அளித்த புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE