வெள்ளவேடு : திருவள்ளூர் அருகே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, தனியார் கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த, ஜமீன்கொரட்டூர் பகுதியில் உள்ளது, தனியார் இன்டர்நேஷனல் மெரைன் கல்லுாரி.பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வரும் இந்த கல்லுாரியின் விடுதியில், நேற்று முன்தினம் இரவு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது.இதில், மூன்றாம் மற்றும் நான்காமாண்டு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பிளாஸ்டிக் சேரின் உடைந்த கால் பகுதி, பீஹார் மாநிலம், பாட்னாவைச் சேர்ந்த ஆதித்ய ஷர்மா, 20, என்ற மாணவர் கழுத்தில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, சக மாணவர்கள், ஆதித்ய ஷர்மாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ஆதித்ய ஷர்மா, இறந்து விட்டதாக கூறினர்.வெள்ளவேடு போலீசார், மாணவரின் உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.,க்கள், அரவிந்தன், சண்முகப்பிரியா ஆகியோர், சம்பவ இடமான தனியார் மெரைன் கல்லுாரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.இதுகுறித்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, கல்லுாரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் சோகத்தையும், பரபரப்பையும், ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE