கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து, சென்னை வந்த அரசு பேருந்தில், 24 கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர். பஸ்சில் பயணித்த மூவரிடம் விசாரணை நடத்தினர்.அவர்களில், தேனி மாவட்டம், கம்பம் பாண்டியன், 30, கேரள மாநிலம், பத்தினம்திட்டா அருண்மோன், 24, ஆகிய இருவர், கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர்களை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE