திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், 14 நாட்களில், பக்தர்கள், 44.84 லட்சம் ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர். அப்போது பக்தர்கள் தங்களது காணிக்கைகள் ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவை மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர்.அந்த வகையில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் ரமணி ஆகியோர் முன்னிலையில், 14 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை திறந்து, கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 44 லட்சத்து, 84 ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கம், 295 கிராம் தங்கம், 2,500 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE