வெள்ளவேடு : வெள்ளவேடு அருகே, ஏரியில் மூழ்கி இருவர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பூந்தமல்லி அடுத்த, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார், 30. இவர், நண்பர் சதீஷ், 31, உட்பட ஏழு நண்பர்களுடன், நேற்று, வெள்ளவேடு அடுத்த, நேமம் ஏரியில் குளிக்க வந்துள்ளனர்.இதில், சதீஷ்குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் ஏரியில் குளிக்க இறங்கி உள்ளனர். அப்போது, திடீரென ஏரியில் இருவர் மூழ்கினர்.குளிக்க சென்ற இருவரையும் காணவில்லை.
இதையடுத்து, நண்பர்கள் கூச்சலிடவே, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், ஏரியில் இறங்கி சதீஷ்குமார் உடலை மீட்டனர்.வெள்ளவேடு போலீசார் மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சதீஷ் உடலை தேடி வருகின்றனர்.இதுகுறித்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE