மாமல்லபுரம் : பெருமாளேரி பகுதி, அனாதீன நிலத்தை, தனியார் துாய்மைப்படுத்தியதால், மக்கள் குவிந்து பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த, பெருமாளேரி பகுதியில், 1970ல், இவ்வூர் விவசாயிகளுக்கு, அரசு சார்பில், விவசாய நில பட்டா வழங்கப்பட்டது.அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தில் பணியாற்றியோர், புல எண். 194/28ல், 5 ஏக்கர் நிலத்திற்கு, பயனாளிகள் போர்வையில், பட்டா பெற முயன்றதாக கூறப்படுகிறது.இப்பகுதியினர் எதிர்ப்பால், அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இப்புல எண் நிலம், வருவாய்த் துறை 'அ' பதிவேடு உள்ளிட்ட ஆவண பதிவுகளில், தற்போதும், அரசு புஞ்சை அனாதீன நிலமாக நீடிக்கிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு, செப்., 14ல், இதே புல எண்ணில், இருவர் பெயரில், தலா, 2.5 ஏக்கர் வீதம், பட்டா வழங்கப்பட்டு உள்ளது.இதையறிந்து, பொதுமக்கள் சார்பில், இவ்வூர் கே.முனுசாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையில் உள்ளது.இச்சூழலில், நேற்று முன்தினம் மாலை, தனியார், நிலத்தை சமன்செய்ய, பணிகளை துவக்கியுள்ளனர். இதையறிந்து, நேற்றும் இப்பணி தொடரலாம் என கருதி, காலை, 10:30 மணிக்கு, மக்கள் அங்கு சென்றனர். இதனால், பணியை தவிர்த்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE