தென்காசி:மனைவியை கொலை செய்து, தப்பிய கணவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஊத்துமலையைச் சேர்ந்தவர் பூங்கோதை, 21; கணவர் ஜோகிந்தர், 25; வடமாநிலத்தைச் சேர்ந்தவர். இருவரும், திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்தனர். காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்ததால், இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பூங்கோதை, பெற்றோரிடம் கூறினார். சுரண்டையில் தனிக்குடித்தனம் வைத்தனர். ஜோகிந்தர் கட்டட வேலைக்கு சென்றார். தொடர்ந்து, வேலைக்கு செல்லாததால், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது.நேற்று காலை, நீண்ட நேரமாகியும் வீட்டு கதவு திறக்கவில்லை. போலீசார் வந்து பார்த்தபோது, பூங்கோதை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலைமறைவான ஜோகிந்தரை, போலீசார் தேடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE