காஞ்சிபுரம் : கொரோனா ஊரடங்கு மற்றும் பக்தர்கள் நலன் கருதி, வைகுண்ட ஏகாதசியான நேற்று, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என, மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, இந்து முன்னணியினர், வரதராஜ பெருமாள் கோவில் முன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அஷ்டபுஜ பெருமாள் கோவில் நுழைவாயில் வளைவு முன் அமர்ந்து, போராட்டம் நடத்திய, இந்து முன்னணியினரைச் சேர்ந்த ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE