திருமுக்கூடல் : திருமுக்கூடல் சுற்று வட்டார பகுதி பாலாற்றங்கரையோர விவசாய நிலங்களில், வேர்க்கடலை விதையிடும் பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில், வயலக்காவூர், புல்லம்பாக்கம், நெய்யாடுவாக்கம் உள்ளிட்ட கிராமங்கள், செய்யாற்றங்கரையொட்டி உள்ளன. திருமுக்கூடல், பினாயூர், சீட்டணஞ்சேரி போன்ற கிராமங்கள் பாலாற்றங்கரையொட்டி உள்ளன.தற்போது, பருவ மழை பெய்து, ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, பாலாறு மற்றும் செய்யாற்று கரையோர விவசாய நிலங்களில், வேர்க்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோர நிலங்கள் வேர்க்கடலை சாகுபடிக்கு உகந்ததாக இருக்கும் என்பதால், வேர்க்கடலை பயிரிடுவதாக விவசாயிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE