கள்ளக்குறிச்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு கள்ளக்குறிச்சி புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் திருப்பலி நடந்தது. இதில், கன்னிமரியாள், சூசையப்பர், குழந்தை ஏசு, மூன்று ஞானிகள், ஆட்டு இடையர்கள் ஆகியோரை ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் எழுந்தருளச் செய்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு ஆடம்பர திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஜோசப்ராஜ் திருப்பலி நடத்தி வைத்தார்.இதேபோன்று, கள்ளக்குறிச்சி ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தா தேவாலயத்திலும் திருப்பலி நடந்தது. குடிலில் இயேசு கிறிஸ்துவை எழுந்தருளச் செய்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இறைவழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE