கடலுார்: கடலுார் நகர கிறிஸ்தவ ஆலயங்களில்கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடலுார் மஞ்சக்குப்பம் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட குடிலில் ஏசுவின் சொரூபத்தை பங்கு தந்தை வைத்து சிறப்பு திருப்பலி நடத்தினார். புத்தாடை அணிந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறினர்.கிறிஸ்தவர்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி நடைமுறையை கடைபிடித்தும் பங்கேற்றனர்.கடலுார் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சக்குப்பம் துாய எபிபெனி ஆலயம் உட்பட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE