கோவை:கோவை அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகில், நடுரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது. சிக்னலில் நின்று வேகமாக வரும், இருசக்கர வாகனங்கள் இந்த குழியில் இறங்கி, தடுமாறி தினமும் விபத்துக்கு உள்ளாகின்றன.ஏற்கனவே வாகன ஓட்டிகளால் புகார் தெரிவிக்கப்பட்டு, இந்த குழி மூடப்பட்டது. இப்போது மீண்டும் அதே இடத்தில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இருசக்கர வாகனங்கள், விபத்துக்கு உள்ளாகின்றன. நெடுஞ்சாலை துறையினர் உடனே சரி செய்தால், உயிர் பலியை படுக்கலாம் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE