தென்காசி:தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆட்கள் மூலம் தாக்கிய டாக்டர் சொர்ணலதா உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தென்காசியை சேர்ந்தவர் சுடலைமுத்து 27. வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது தந்தை சண்முகம் மற்றும் தாயார் வாகனத்தில் செல்லும்போது கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்களை தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். பரிசோதித்து பார்த்த டாக்டர் சொர்ணலதா தந்த மருந்து சீட்டு கீழே விழுந்துள்ளது. அப்போது டாக்டர் சொர்ணலதா, சண்முகம் மற்றும் மனைவியை திட்டியுள்ளார்.
சுடலைமுத்து டாக்டரிடம், ஏன் வயதானவர்களை திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், டாக்டர் சொர்ணலதா, போனில் தமக்கு தெரிந்த நால்வரை அழைத்துள்ளார். அந்த கும்பல், மருத்துவ மனை வளாகத்தில் சண்முகம், அவரது மனைவி, சுடலைமுத்து ஆகியோரை தாக்கியுள்ளனர். தென்காசி போலீசார் டாக்டர் சொர்ணலதா மற்றும் தாக்குதல் நடத்திய 4 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE