கோவை:கோவை கணபதி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி தீபா, 40. கடந்த, 22ம் தேதி தன் வீட்டின் அருகே இருந்த மளிகைக்கடையில், பொருட்கள் வாங்கி கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்மநபர்கள் இருவர், முகவரி கேட்பது போல், அவர் கழுத்தில் அணிந்திருந்த, நான்கு பவுன் தங்க செயினை பறித்து தப்பினர்.தீபா அளித்த புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE