சென்னை:'அரசியல் கட்சிகள் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்' என ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மாவிடம் தி.மு.க. அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது:அரசியல் கட்சிகள் 'கிராம சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளீர்கள். மக்களை சென்றடைய தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கையை ஆளும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி முடக்க பார்க்கிறது.
தி.மு.க. சார்பில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்களை அதிகாரப்பூர்வ கிராம சபை கூட்டமாக கருதப்படாது. மாதிரி கூட்டங்கள் நடத்த சட்ட ரீதியான தடை இல்லை. எனவே நீங்கள் வழங்கிய சுற்றிக்கையை திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE