திருப்பூர்:மறைந்த முன்னாள் பிரதமர் பிறந்த நாள் முன்னிட்டு, பா.ஜ., வினர் ரத்த தானம் வழங்கினர்.திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், வாஜ்பாய் பிறந்த நாள் முன்னிட்டு கட்சியினர் ரத்த தானம் வழங்கினர். முன்னாள் எம்.பி., ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் ரத்த தானம் வழங்கி துவக்கி வைத்தனர்.மாவட்ட செயலாளர் கார்த்திக், மகளிர் அணி மாநில செயலாளர் மலர்க்கொடி தர்மராஜ், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி முன்னிலை வகித்தனர். 100 பேர் ரத்த தானம் வழங்கினர்.l அவிநாசி பா.ஜ., மேற்கு ஒன்றியம் மற்றும் திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பில், ஆட்டையாம்பாளையம் புதுாரில், ஒன்றிய பா.ஜ., அலுவலகம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.அமைப்புசாரா பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாவட்ட தலைவர் மோகன்குமார், ஒன்றிய தலைவர் பாலமுருகன், பொது செயலாளர் பிரபு, செயலாளர் வக்கீல் பிரபு, பொருளாளர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE