சின்னமனுார்:தேனி மாவட்டம் குச்சனுார் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளிய கோயிலில் நாளை சனிபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
விழா குறித்த ஆலோசனை கூட்டம் போடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் நடந்தது. முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பாதை குறுகலாக இருப்பதால் சீலையம்பட்டியிலிருந்து குச்சனுாருக்கு பாலம் வழியாக வர தடை விதித்தல். முல்லைப்பெரியாற்றில் அதிக தண்ணீர் வருவதால் கண்காணிப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுதல் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE