மடத்துக்குளம்:தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின், நான்காவது கோட்ட மாநாடு மடத்துக்குளம் அருகே கழுகரையிலுள்ள அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.மாநாட்டுக்கு, உட்கோட்டத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநாட்டில், சாலைப்பணியாளர்களின், 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, அரசு உத்தரவு வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம், 5,200 - -20,200 ரூபாய் வரையும், தர ஊதியம் 1,900 ரூபாயும் வழங்க வேண்டும்,சாலைப்பணியாளர்களுக்கு ஆபத்து படி, ஊதியத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும், சாலைகள் பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், பழநி ஆகிய கோட்ட, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளை, தனியார் பராமரிக்க வழங்கியதை திரும்பப் பெற்று, அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE