ஊட்டி:நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள, முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், முக கவசம் அணிவது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறுவோரை கண்காணித்து, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கென, நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சுகாதாரத் துறையினர் கூறுகையில்,'முக கவசம் அணிவது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சுற்றுலா பயணிகளுக்கு மொத்தம், 1.80 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE