திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 72 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களில் குறைந்தபட்ச அளவாக, நேற்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 16 ஆயிரத்து, 818 ஆக உயர்ந்துள்ளது.நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட, 72 பேர் உட்பட, 16 ஆயிரத்து, 229 பேர் இதுவரை, கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 374 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 57 வயது ஆண், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுவரை, 47 பெண்கள் உட்பட, 215 பேர் பலியாகியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE